பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

அருள். ஒன்று கருவி; மற்றொன்று பேறு. ஒன்று வழி; மற்றொன்று திருமாளிகை.

எல்லோரும் சனாதனங்களைப் பயிலுவதில்லை. அதற்குரிய பாக்கியம் அவர்களுக்கில்லை என்றே சொல்லவேண்டும். தூங்கிக் கொண்டிருப்பவர்களை எழுப்பும் கோழியைப் போல, அவனை வணங்கிச் சாதனை செய்ய இறைவனுடைய அருளே, சாதன அருளே வேண்டும். அந்த அருளுக்கு அடையாளமாக நிற்பது கோழி. அது தூங்குகிறவர்களை எழுப்பி கதிரவனது வருகைக்குக் காத்திருக்கச் செய்கிறது. அவன் அருளைக் கொண்டேதான் உலகிலுள்ளவற்றில் நித்தியம் எது, அநித்தியம் எது என்று சிந்தித்து அறிவும் விவேக உணர்ச்சி உண்டாகும்.

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனுக்கும் நாம் இறந்து போகப் போகிறோம் என்ற உண்மை தெரியாதது அல்ல. ஆறு ஏழு வயசுக் குழந்தைக்கே சாவைப் பற்றித் தெரியும். அதைத் தெரிந்து கொண்ட பிறகும் நல்ல நெறியில் செல்ல முயல்வதில்லை. நமக்குச் சாவு வருவது உறுதியென உணர்ந்து, பிறந்து பிறந்து சாகாமல் இருக்கும் நிலையை நாம் அடைய வேண்டுமென்ற உணர்ச்சி உடையவர்களுக்கு, உலகிலுள்ள இருளில் அகப்பட்டு மயங்கித் தூங்கிப் போகாமல் இருக்க எம்பெருமான் திருக்கரத்திலுள்ள கோழி கூவுகிறது. அதைக் கேட்டு முயற்சி உடைய மனிதர்கள் எல்லோரும் அந்தக்கோழியைக் கொடியாக உடைய எம்பெருமானை வணங்கத் தலைப்படவேண்டும்.

"கோழிக் கொடியன் அடிபணி யாமல் குவலயத்தே
"வாழக் கருதும் மதியிலிகாள்

என்று வேறு ஒரு பாட்டில் பாடுகிறார் அருணகிரியார். அந்தச் சேவலின் செயலை அவர் சொல்வதைக் கவனிக்கலாம்.

3

வேலவன்

படைபட்ட வேலவன் பால்வந்த
வாகைப் பதாகை என்னும்
தடைபட்ட சேவல் சிறகடிக்
கொள்ள.

334