பக்கம்:உயிரில் கலந்தது.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7


“இந்தமாரிக் கதைகளைப் போடறதுக்கின்னு தமிழ் தாட்டிலே சில பத்திரிகைங்க இருக்கு. அங்கே போய்க் கொடுங்க!”

“இந்த ஏமாற்றத்தை என்னலே தாங்க முடியலைங்க. உங்களை ரொம்ப நம்பி வந்தேன். ஸார்!”

“மன்னிக்கணும்: ‘எனக்குப் பணம் எதுவும் வேண்டாம், ஸார்!”

“எதற்கு...?” “என்னுடைய இந்தக் கதையைப் போடுவதற்கு...!” ‘நல்ல மனிதர் ஐயா நீர்! புதுமைப்பித்தன் காலத் தில் எழுதியிருக்கவேண்டிய புள்ளி ஐயா நீர்!”

“நூற்றிலொரு வார்த்தை ஸார்!’ ** fهه ، rtaيد 6 4 “உங்க கதைங்கன்ன எனக்கு ரொம்பப் பிடிக்கும். காலேஜிலே படிக்கிற என் ஸிஸ்டர்கூட உங்க கதைகளை விடாமல் படிக்கும், ஸார்!’

“அப்படியா? சந்தோஷம்.இந்தாருங்கள் காப்பி” ‘எனக்குக் காப்பி வேண்டாங்க; என் கதை...” “உங்க கதைதானே?...இந்தாருங்கள்...’ - நீர்த்தடாகத்தின் அடியிலிருந்து எம்பிக் குதித்து விளையாடும் கெண்டைமீன், மீண்டும் நீரடிக்கே திரும்பிச் செல்வதுபோல, அந்தக் கதை அதற்கு உரித்தானவரிடமே சரண் புகுந்தது.

மெல்லிய நகைப்புச் சத்தத்தை ‘ஒசைப்படுத்தாமல் உண்டாக்கினன் பையன். -

ஞானசீலன் நெற்றிப் பொட்டில் கையைப் பதித்து அழுத்திக் கொண்டார். வந்தவர் தந்த கதையைப் படித்த தன் பலன் கைமேல்-அல்ல, தலைமேல் கிட்டியது. சிருஷ்டி