அணிலாடு முன்றிலார்

விக்கிமூலம் இலிருந்து

அணிலாடு முன்றிலார்[தொகு]

குறுந்தொகை- 41. பாலைத்திணை[தொகு]

(பிரிவிடை வேறுபாடு கண்டு கவன்ற தோழிக்குக் கிழத்தி யுரைத்தது)


காதல ருழைய ராகப் பெரிதுவந்து
சாறுகொ ளூரிற் புகல்வேன் மன்ற
அத்த நண்ணிய வங்குடிச் சீறூர்
மக்கள் போகிய வணிலாடு முன்றிற்
புலப்பில் போலப் புல்லென் (5)
றலப்பென் றோழியவ ரகன்ற ஞான்றே.
"https://ta.wikisource.org/w/index.php?title=அணிலாடு_முன்றிலார்&oldid=13092" இலிருந்து மீள்விக்கப்பட்டது