அறிவுடை நம்பி

விக்கிமூலம் இலிருந்து


அறிவுடை நம்பி[தொகு]

1. அகநானூறு - 28. குறிஞ்சித்திணை[தொகு]

(தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது. இது பகலே சிறைப்புறம்.)



மெய்யிற் றீரா மேவரு காமமொடு
எய்யா யாயினு முரைப்பல் தோழி
கொய்யா முன்னுகுங் குரல்வார்பு தினையே
அருவி யான்ற் பைங்கால் தோறும்
இருவி தோன்றின பலவே நீயே (5)
முருகுமுரண் கொள்ளுந் தேம்பாய் கண்ணிப்
பரியல் நாயொடு பன்மலைப் படரும்
வேட்டுவற் பெறலொ டமைந்தனை யாழநின்
பூக்கெழு தொடலை நுடங்க வெழுந்தெழுந்து
கிள்ளைத் தெள்விளி யிடையிடை பயிற்றி (10)
ஆங்காங் கொழுகா யாயின் அன்னை
சிறுகிளி கடிதல் தேற்றா ளிவளெனப்
பிறர்த்தந்து நிறுக்குவ ளாயின்
உறற்கரி தாகுமவன் மலர்ந்த மார்பே.



2. குறுந்தொகை - 230. நெய்தல்திணை[தொகு]

(வலிதாகக் கூறிக் குறை நயப்பித்தது.)


அம்ம வாழி தோழி கொண்கன்
தானது துணிகு னல்லன் யானென்
பேதை மையாற் பெறுதகை கெழுமி
நோதகச் செய்ததொன் றுடையேன் கொல்லோ
வயச்சுறா வழங்குநீ ரத்தந் (5)
தவச்சின் னாளினன் வரவறி யானே.



3. நற்றிணை - 15. நெய்தல்திணை[தொகு]

(வரைவு நீட்டித்தவழித் தோழி தலைமகற்குச் சொல்லி வரைவு கடாயது)


முழங்குதிரை கொழீஇய மூரி யெக்கர்
நுணங்குதுகில் நுடக்கம் போலக் கணங்கொள
ஊதை தூற்று முரவுநீர்ச் சேர்ப்ப
பூவி ன்ன்ன நலம்புதி துண்டு
நீபுணர்ந் தனையே யன்மையின் யாமே (5)
நேர்புடை நெஞ்சந் தாங்கத் தாங்கி
மாசில் கற்பின் மடவோள் குழவி
பேஎய் வாங்க்க் கைவிட் டாங்குச்
சேணு மெம்மொடு வந்த
நாணும் விட்டேம் அலர்கவிவ் வூரே. (10)



4. புறநானூறு-188[தொகு]

திணை: பொதுவியல்[தொகு]

துறை: பொருண்மொழிக் காஞ்சி[தொகு]

படைப்புப் பலபடைத்துப் பலரோ டுண்ணும்
உடைப்பெருஞ் செல்வ ராயினு மிடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழந்தும்
நெய்யுடை யடிசில் மெய்பட விதிர்த்தும் (5)
மயக்குறு மக்களை யில்லோர்க்குப்
பயக்குறை யில்லைத்தாம் வாழு நாளே.
"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவுடை_நம்பி&oldid=13102" இலிருந்து மீள்விக்கப்பட்டது