இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
131 62. ஆள்வினை உடைமை
அருமை யுடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும். 611
வினைக்கண் வினைகெடல் ஒம்பல் வினைக்குறை தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு. 612
தாளாண்மை யென்னுந் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை யென்னுஞ் செருக்கு. 613
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை வாளாண்மை போலக் கெடும். 614
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர் துன்பம் துடைத்துன்றுந் துண். 615
முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும். 616
மடியுளான் மாமுகடி யென்ப மடியிலான் தாளுளாள் தாமரையி னாள். 617
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி. 618
தெய்வத்தா னாகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். 619
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழா துளுற்று பவர். 620