டாக்டரி சி. பாலசுப்பிரமணியன் 17
உரையும் பாட்டும் உடையோர் சிலரே!
மரையிலை போல மாய்ந்திசினோர் பலரே! புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏலா வான ஆர்தி
எய்துப என்ப, தம் செய்வினை முடித்து எனக் கேட்பல் எங்தை சேட்சென்னி கலங்கிள்ளி தேய்தல் உண்மையும், பெருகல் உண்மையும் மாய்தல் உண்மையும், பிறத்தல் உண்மையும் அறியா தோரையும் அறியக் காட்டித் திங்கள் புத்தேள் திரிதரும் உலகத்து வல்லார் ஆயினும் வல்லுங்ர் ஆயினும் வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி அருள வல்லை ஆகுமதி! இருள் இலர் கொடாமை வல்லர் ஆகுக கெடாத நுப்பின்கின் பகைஎதிர்ந் தோரே.
-புறநானூறு : 27
பழந்தமிழர்களுள் ஆண்கள் கடமையே-கொண்ட தொழிலே உயிராகக் கொண்டிருந்தனர்; ஒளி பொருந்திய கெற்றியையுடைய பெண்கள் தத்தம் கணவரையே உயிராகக் கொண்டிருந்தனர்.
வினையே ஆடவர்க்கு உயிரே, வான் நுதல் மனையுறை மகளிர்க்கு அவ்வாடவர் உயிர்
-குறுந்தொகை 135 : 1.2
பழந்தமிழர் மறத்துறையிலும் அறநெறி போற்று பவர்களாக இருந்தனர். ஒரு நாட்டின்மீது படையெடுத் துச் செல்வதற்கு முன்னால், அக்காட்டிலுள்ள பசுக் களும், பசுப் போன்ற மென்மைத் தன்மையுடைய அந்தணர்களும், பெண்களும், கோய்வாய்ப்பட்டவர் களும், நீத்தார் கடன் செய்தற்குரிய பொன் போலும் பிள்ளைகளைப் பெறாதவர்களும் பாதுகாப்பான