பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/880

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“......ஆரோக்கியமான, ரசமான கிராம வாழ்க்கை முறையை மீண்டும் ஏற்படுத்துவதன் மூலம் பொருளாதார, தார்மீகச் சீரழிவைத் தடுக்க முடியும். அரசாட்சியின் ஆதார உறுப்பாகப் பஞ்சாயத்தை மீண்டும் ஏற்படுத்தினால்தான் இது சாத்தியமாகும்...... கிராமத்தின் தேவைகளை இதன் வாயிலாக வெளியிட முடியும் ; அவசியமானால் மேல் அதிகார ஸ்தாபனத்தினிடம் அவற்றைப்பஞ்சாயத்து எடுத்துக் கூற முடியும், இன்று ஊமையாகவும் பிறரால் அடக்கி ஒட்டப்படும் விலங்காகவும் இருக்கும் கிராமத்தின் வாய்க்கட்டைப் பஞ்சாயத்து அவிழ்த்து விடும்......”

-டாக்டர் அன்னிபெஸண்ட் [1917]