திருத்தூதர்களின் நம்பிக்கை அறிக்கை

விக்கிமூலம் இலிருந்து

திருத்தூதர் நம்பிக்கை அறிக்கையின் பழைய தமிழ்ப் பெயர்ப்பு[தொகு]

கத்தோலிக்க திருச்சபையின் வழிபாட்டு நூலாகிய "திருப்பலிப் புத்தகம்" தரும் பாடம் இதோ:

  • பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கின்றேன்.
  • அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவையும் விசுவசிக்கின்றேன்.
  • இவர் பரிசுத்த ஆவியினால் கர்ப்பமாய் உற்பவித்து கன்னிமரியாயிடமிருந்து பிறந்தார்.
  • போஞ்சு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கம் செய்யப்பட்டார்.
  • பாதளத்தில் இறங்கி, மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார்.
  • பரலோகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பக்கத்தில் வீற்றிருக்கிறார்.
  • அவ்விடத்திலிருந்து சீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க வருவார்.
  • பரிசுத்த ஆவியை விசுவசிக்கின்றேன்.
  • பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கின்றேன்.
  • அர்ச்சியசிஸ்டவர்களுடைய சமுதீதப் பிரயோசனத்தை விசுவசிக்கின்றேன்.
  • பாவப் பொறுத்தலை விசுவசிக்கின்றேன்.
  • சரீர உத்தானத்தை விசுவசிக்கின்றேன்.
  • நித்திய சீவியத்தை விசுவசிக்கின்றேன்.

-- ஆமென்.

திருத்தூதர்களின் நம்பிக்கை அறிக்கை: புதிய தமிழ்ப் பெயர்ப்பு[தொகு]

மேலே தரப்பட்ட தமிழ்ப் பெயர்ப்பில் வடமொழிச் சொற்கள் அதிகம் பயின்றுவருவதைத் தவிர்த்து, தூய தமிழில் கீழ்வரும் பெயர்ப்பு தமிழக ஆயர் குழுவால் செய்யப்பட்டது. அந்த "நம்பிக்கை அறிக்கை" பாடம் இதோ:


  • விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த /

எல்லாம் வல்ல தந்தையாகிய / கடவுளை நம்புகிறேன்.

  • அவருடைய ஒரே மகனாகிய / நம் ஆண்டவர்

இயேசு கிறிஸ்துவையும் நம்புகிறேன்.

  • இவர் தூய ஆவியாரால் கருவுற்று /

தூய கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார்.

  • பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு / சிலுவையில் அறையப்பட்டு / இறந்து அடக்கம் செய்யப்பட்டார்.
  • பாதாளத்தில் இறங்கி / மூன்றாம் நாள் /

இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார்.

  • விண்ணகம் சென்று / எல்லாம் வல்ல தந்தையாகிய /

கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்.

  • அவ்விடத்திலிருந்து / வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் /

தீர்ப்பு வழங்க மீண்டும் வருவார்.

  • தூய ஆவியாரை நம்புகிறேன்.
  • தூய கத்தோலிக்கத் திருச்சபையையும் /
  • புனிதர்களுடைய சமூக உறவையும் நம்புகிறேன்.
  • பாவ மன்னிப்பை நம்புகிறேன்.
  • உடலின் உயிர்ப்பை நம்புகிறேன்.
  • நிலை வாழ்வை நம்புகிறேன். / ஆமென்.