பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29



3. இராமானுஜன் பிறந்த ஆண்டு எது?
1887.

4. இவர்தம் பெற்றோர்கள் யார்?
தந்தை சீனுவாச அய்யங்கார், தாய் கோமளத்தம்மாள்.

5. இராமாஜனின் மனைவி யார்?
ஜானகியம்மாள். இவர் 1994இல் இயற்கை எய்தினார்.

6. குடந்தையில் இராமானுஜன் வாழ்ந்த வீடு எது?
சாரங்கபாணி பெருமாள் கோவில் கிழக்குச் சந்தித் தெருவில் 17ஆம் எண்ணுள்ள ஒரு சாதாரண ஓட்டுக் கூரை வீட்டில் வாழ்ந்து வந்தார்.

7. இராமானுஜனுடன் உடன்பிறந்தவர்கள் யார் யார்?
சகோதரர்கள் 4 பேர். சடகோபன், சேஷன், இலட்சுமி நரசிம்மன், திரு நாராயணன். சகோதரி அம்புஜவல்லி.

8.இராமனுஜனின் இயல்புகள் யாவை?
தனிமை, சிந்தனை, தெருக்கூத்திலும் பொம்மலாட்டத்திலும் ஆர்வம்.

9. தென்னாட்டுச் கேம்பிரிட்ஜ் என்று அப்பொழுது கருதப்பட்ட கல்லூரி எது?
அரசு கலைக் கல்லூரி, குடந்தை.

10. இராமானுஜனின் இரண்டாம் வயதில் ஏற்பட்ட பெரியம்மை நோயின் விளைவு யாது?
அது அவர்தம் தடுப்பாற்றலைக் குறைத்துவிட்டதால் அடிக்கடி நோய்களுக்கு ஆளானார்.

11. இராமானுஜன் தம் அரிச்சுவடிப் படிப்பை எப்பொழுது தொடங்கினார்? எங்கு?
1882இல், காஞ்சிபுரத் திண்ணைப் பள்ளியில்.

12. இராமானுஜன் படித்த கல்வி நிலையங்கள் யாவை?
காங்கேயன் பள்ளி, நகர உயர்நிலைப் பள்ளி, குடந்தை, பச்சையப்பன் கல்லூரி, சென்னை.

13. இராமானுஜன் எந்த வயதில் முதன்முதல் உதவித் தொகை பெற்றார்? எதற்காக?
10ஆம் வயதில் பெற்றார். மாவட்டத் தொடக்கநிலைத் தேர்வில் முதல் மாணவனாக வந்ததற்காக.