இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
| 6 கவியரசர் முடியரசன் படைப்புகள் -10 தமிழ்ப் பொழில் மறைந்து விட்டது. அதிலும், உரைநடைக்கே கவிதைபோல வேடமிட்டுக் காட்டும் நவீன கவிஞர்கள் மலிந்து வரும் இக்காலத்தில் தரம்மிக்க மரபுக் கவிதைகளைக் காலத்தின் தேவைகளுக்கு ஈடுசெய்யக்கூடிய வகையில் சுரந்து அளித்துவந்த செந்தமிழ் ஊற்று முடியரசன். தமிழுக்கு வளம் சேர்த்த அறிஞர்களின் படைப்புகளை அரசுடைமை ஆக்கும் சீரிய திட்டம் ஒன்றைத் தமிழக அரசு செயற்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் கவிஞர் முடியரசனின் படைப்புகளையும் அரசுடைமையாக்கிச் சிறப்பிப் பதன் மூலம் இந்த அற்புதக் கவிஞனுக்குத் தமிழ் மக்களின் உணர்வு பூர்வமான அஞ்சலியைப் பிரதிபலிக்க முடியும். தினமணி 5.12.1998