ஈடில்லா ஈற்றிணை!
வையத்தில் முதன்முதலாய் அறிவைப் பெற்றோர் வழிமுறைகள் வாழ்வியற்கே வகுத்துக் கண்டோர் தெய்வத்தின் அருள்போற்றித் தமிழை வாழ்த்தித் தீதகற்றி நலன்கொழிக்கச் சிறந்தே வாழ்ந்தோர் வையத்தின் வாழ்வுநெறி இவைதாம் என்ன
வருமினமும் காணுதற்கே வடித்து வைத்தோர் வையத்தின் முதன்மக்கள் தமிழ மக்கள்
வழிப்பிறந்தோம் நாம்அவரை வணங்குவோமே! 1
முகிழ்த்ததமிழ் அவரறிவின் ஊற்றே யாகும். மூதறிஞர் புலவர்பலர் பாணர் வள்ளல் செழித்ததுவும் அவர்வாழ்வின் சிறப்பா லாகும் செழுந்தமிழின் செய்யுள்வளம் பொருளின் சீர்த்தி முகிழ்த்ததுவும் அவர்முனைந்து மொழியைப் போற்றி முனைப்போடு உயிரென்னக் கொண்ட தாலாம் செழித்ததமிழ் செம்மொழியாய் உயர்ந்தே நாளும் சிறந்ததவர்! தமிழ்ப்பற்றின் சிந்தை யாலாம்!
ட
சூழ்ந்தநிலத் தன்மையினால் உள்ளத் துள்ளே
சுடரிட்டே உணர்வுகளும் தோன்றும் என்றார் வாழ்ந்திருந்த மக்களது வாழ்வை ஆய்ந்து
வகைப்படுத்திக் குறிஞ்சியொடு முல்லை பாலை சூழ்ந்தகடல் நெய்தல்வயல் மருதம் என்றார்
தொடர்போடு வாழ்வதுவும் அமையும் என்றார்
ஆழ்ந்தறிந்து அவற்றில்வரும் ஒழுக்கம் மக்கள் அறிவினிலும் வாழ்வினிலும் அரும்பும் என்றார்!
2