30 டாக்டர். மு.வ.வின் சிந்தனை வளம்
டாக்டர் மு.வ. அவர்கள் இலக்கியங்களின்பால் நிறைந்த ஈடுபாடு கொண்டிருந்தார் என்பது அவர்தம் கூற்றால் விளங்கக் காணலாம்.
“தமிழகத்தின் முழுமணிகளாய் விளங்கி உல கிற்கு ஒளி பரப்பி வருவன சில. அவற்றுள் இங்குக் குறிக்கத் தக்கன இரண்டு; ஒன்று, திருவள்ளுவரின் திருக்குறள்; மற்றொன்று கண்ணகியின் கற்பு.”
-கண்ணகி; முகவுரை: ப - 55
அடுத்து, இலக்கியக் கல்வியினை எவ்வாறு எய்த வேண்டுமென்பதற்கு டாக்டர் மு.வ. அவர்கள் தரும் விளக்கம் வருமாறு:
“இலக்கியக் கல்வி பயன்படவேண்டுமானால், இலக்கியத்தை முதலில் உணர்ந்தறிய வேண்டும்; பிறகு ஆய்ந்தறிய வேண்டும். அப்போதுதான் இலக் கியத்தை நன்கு கற்கவும் முடியும்; கற்றதனால் பயன் பெறவும் முடியும்.
‘உணர்ந்தறிவது என்பது இதயம் கொண்டு இலக்கியத்தை உணர்வது; புலவர் உணர்ந்தவாறே கற்பவரும் உணர முயல்வது; நூல் எழுதிய காலத்துச் சூழ்நிலைக்குள் புகுந்துநின்ற புலவர் காட்டியவாறு காண்பது, ஏன் எவ்வாறு என்ற கேள்விகள் அறியாமல் தன்னை மறந்து கற்பது; அறிவு குற்றேவல் செய்ய, உணர்வு முன் நின்று உணர்த்த, உணர்ந்து கற்கும் முறையாகும் இது.
ஆய்ந்தறிவது என்பது மூளை கொண்டு நுணுகி இலக்கியத்தைக் கற்பது; புலவர் உணர்த்திய வற்றை இன்றைய உண்மைகளைக் கொண்டு