உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராயவரம் பாப்பா மலர் காரியாலயத்தாரும் வெளியிட்டு வந்தனர். சிறுசிறு புத்தகங்களாக இருப்பது என் நண்பர்களில் சிலருக்குப் பிடிக்கவில்லை. எல்லாவற்றையும் சேர்த்து ஒரு புத்தகமாக வெளியிட்டால் நன்றாயிருக்குமே என்று யோசனை கூறினர். எனக்கும் அப்படிச் செய்யவேண்டும் என்ற ஆசை முன்பே இருந்தது. நண்பர்களின் யோசனையைக் கேட்டபிறகு அந்த ஆசை நாளுக்கு நாள் நன்கு வளர்ந்துகொண்டே வந்தது. அதன் விளைவுதான் இப் புத்தகம்: என் பாடல்கள் புத்தக உருவில் வருவதற்குப் பேருதவி புரிந்தவர்களில் முக்கியமானவர் மூவர். 1. ஐயன்பெருமாள் Čársfirá staffär (Senior Lecturer in Tamil, St. Joseph's College, Trichy), g. tegang gig66lustri -9jaufsór (Ex-Lecturer in Tamil, Layola College, Madras), வித்துவான் தணிகை உலகநாதன் அவர்கள் (Hindu Theological High School, Madras) – già espeu(G&Sub argir uostruoft###5 நன்றி. கவிமணியவர்களின் வாழ்த்தும், சொல்லின் செல்வரின் அணிந்துரையும் இப்புத்தகத்திற்குக் கிடைத்ததே நான் பெற்ற பெரும் பேறாகும். அவர்களின் அன்புக்கு வணக்கம் செலுத்துகிறேன். இப்புத்தகம் நல்ல முறையில் வெளிவரப் பெருமுயற்சி எடுத்துக்கொண்ட என் இனிய நண்பர் ரத்னம் அவர்களுக்கும், தெற்குப்பை இராம அப்பிரமணியன் அவர்களுக்கும் என் நன்றி. இத் தொகுதியிலுள்ள பாடல்களைக் குழந்தைகள் படித்து இன்புற்றால் அதுவே நான் அடையும் பேரின்பமாகும். சுமார் பன்னிரண்டு ஆண்டுகளாக தான் செய்துவரும் முயற்சி ஓரளவாவது பயன் பெற்றதென மகிழ்ச்சியடைவேன். குழந்தைகள் இன்பமே எனது இன்பம், அவர்களுக்குத் தொண்டு செய்வதே என் முக்கிய குறிக்கோள். சென்னை, -அழ. வள்ளியப்பன சி-3-54 i{}

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/12&oldid=859444" இலிருந்து மீள்விக்கப்பட்டது