166
அடுத்து, கூத்து (நடன-நாட்டிய) வகையைப் பற்றி அறிய வேண்டியது மிகவும் இன்றியமையாததாகும்.
கூத்தின் பெயர்களாவன:–
“நடமே, நாடகம், கண்ணுள், நட்டம்,
படிகம், ஆடல், தாண்டவம், பரதம்,
ஆறுதல், தூங்கல், வாணி, குரவை,
இலயம், நிலயம், திருத்தம், கூத்தே;
நடனம், தூக்கு, நாட்டியம், நட்டணம்,
நடையும் அதற்கே நவிலலு மாகும்.”
“கரணம், பித்தம், மலைப்பு, பவுரி,
பிரமரி, வீரட் டானம், குனிப்பே,
உள்ளாளனம், கடகம், எனவே ஒன்பதும்
ஒள்ளிய கூத்தின் விகற்ப மாகும்.”
திருமால் ஆடும் கூத்தின் பெயர்களாவன:—
“அல்லியம், குடமாடல், மல்லே, மரக்கால்,
எல்லொளி மாயோன் ஆடலாகும்.”
சிவன் ஆடும் கூத்தின் பெயர்களாவன:–
“பாண்டரங்கம், கபாலம், கொடுகொட்டி,
என்றிவை மூன்றும் முக்கண னாடல்.”
முருகன் ஆடும் கூத்தின் பெயர்களாவன:—
“கொட்டியும், குடையும், குமரன் ஆடல்.”
திருமகள் ஆடும் கூத்து:–
“பரவை என்பது திருமகள் ஆடல்.”
துர்க்கை (காளி) ஆடும் கூத்து:-
“மரக்கால், கூத்தே, துர்க்கை ஆடல்.”