இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தமிழ் இலக்கிய வரலாற்று அறிவு தமிழ் நாட்டில் ஐந்தாறு பேர்களுக்கே உண்டு. இந்த ஐந்தாறு பேர்களில் நம் மதிப்பிற்குரிய மெய் இலக்கியத் தொண்டர் திரு. சி. பாலசுப்பிரமணியன் அவர்கள் ஒருவர்.
- தமிழ்வாணன்
தங்கள் தமிழ் இலக்கிய வரலாறு மாணவர் மேலும் மேலும் இலக்கிய அறிவு பெறுதற்கு விரும்பும் முறையில் எழுதப்பட்டுள்ளது.
- பேராசிரியர் மேரி மாசிலாமணி அம்மையார், M.A., L.T.
எழுத்துவன்மை, பேச்சுத்திறமை, ஆராய்ச்சி நலம், உழைப்புத் திரு முதலிய சிறப்பெல்லாம் நிறையப்பெற்றவர் இவ்வாசிரியர் ஆவர்.
- பேராசிரியர் தண். கி. வேங்கடாசலன்