14
நற்றிணை தெளிவுரை
தோழி
தலைமகளுக்கு
நற்றினை தெளிவுரை
நன்னூர்க் கண்ணே கொண்டுபோய் மணம் புரிந்து, இல்லத்தே வைத்து அன்புடன் காத்துப் பேணுவான் என்ப தாம். இது பகற்போதில் காட்டகத்தே கண்டது.
இரவில், முழுநிலவு எறிக்கக் கோங்கம் பூக்களால் அழகுடன் தோன்றும் காட்டைக் காட்டி, 'அவள் தந்தை அறம் செய்யும் கார்த்திகை நாளில் எடுத்த கார்த்திகை விளக்கு வரிசைகள் போலிருக்கின்றது' எனப் புனைந்து கூறி, அவளை மகிழ்விக்கின்றான். இதனால், காட்டிடையே இரவில் ஏதும் இடையூறில்லை என்று கூறினானுமாயிற்று.
விளக்கொழுங்கு கோங்கம் பூப்போலத் திகழ்தலைக் கோங்கின் புதுமலர் கைவிடு சுடரின் தோன்றும்' (அகம். 153) எனப் பிற சான்றோரும் உரைப்பர். காடு விளக்கம் பெறுவதுபோல, நீயும் மனைவாழ்க்கையில் என்னால் பேணப் பட்டுப் பெரிதும் விளக்கம் பெறுவாய் என்று உணர்த்தி அவளைத் தெளிவித்தானும் ஆம்.
203. கானல் இயைந்த கேண்மை! பாடியவர்: உலோச்சனார். திணை: துறை : தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழிதலைமகட்குச் சொல்லுவாளாய் வரைவு கடாயது.
... ...
[(து. வி.) தலைமக்களின் களவுறவை மணவுறவாக்க விரும்பினாள் தோழி; தலைவன் கேட்டு உணருமாறு, தலைவிக் குச் சொல்லுவாள்போல, அவள் சொல்லுவதாக அமைந்த செய்யுள் இது.)
முழங்குதிரை கொழீஇய மூரி எக்கர்த்
தடந்தாள் தாழை முள்ளுடை நெடுங்கோட்டு அகமடற் பொதுளிய முகைமுதிர்பு அவிழ்ந்த கோடுவார்ந் தன்ன தோடுபொதி வெண்பூ எறிதிரை உதைத்தலின் பொங்கித் தாதுசோர்பு சிறுகுடிப் பாக்கத்து மறுகுபுலால் மறுக்கும் மணங்கமழ் கானல் இயைந்தநங் கேண்மை ஒருநாள் கழியினும் உய்வரிது என்னாது. கதழ்பரி நெடுந்தேர் வரவாண் டழுங்கச் செய்ததன் தப்பல் அன்றியும்
உயவுப்புணர்ந் தன்றிவ் வழுங்கல் ஊரே!
5
10