34
அதற்குக் காற்று பதில் கூறியது.
"மேகத்தம்பி, உங்கள் தாத்தா கொண்டகோபத்தால் பட்டுப் பட்டிப்பச்சைப் பூங்கா வாடிக் கிடக்கிறது. அங்கிருந்த புற்களெல்லாம் வாடி வதங்கி மண்ணோடு மண்ணாய்ச் சாய்ந்து கிடக்கின்றன. பார்க்கப் பொறுக்கவில்லை" என்று கூறியது காற்று.
"எங்கள் தாத்தா படைபடையாகக் காட்சியளித் தாராமே? நாங்கள் வந்தால் கூட அப்படித் தானே தெரியும் அந்தப் புல்லழகிகளுக்கு" என்று கேட்டது மேகம்.
"ஆத்திரப்படாதே மேகத்தம்பி. இப்போது புல்லழகிகள் மிகச் சோர்ந்து போயிருக்கிறார்கள்.
உங்களுடைய உதவியில்லாமல் அவர்கள் நொந்து போயிருக்கிறார்கள். வெந்த புண்ணில் வேல் குத்துவது போல், துன்பமுற்றவர்களைப் பகைத்துக் கொள்வது பண்பாகாது. எவரும் நம்மை வாழ்த்தும்படி நடந்து கொள்வது தான் சிறப்பாகும்" என்று காற்று மேகத்திற்குக் கூறியது.
"காற்றண்ணா, உங்களுக்காக நாங்கள் அங்கு வர ஒப்புக் கொள்கிறோம். வாருங்கள் போவோம்" என்று மேகம் கூறியது, காற்று எழுந்து வீசியது. மேகக் கூட்டங்கள் நகர்ந்தன. பூங்காவில் அன்று நல்ல மழை!