இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
8
தாமரை
நாட்டின் வருங்காலச் செல்வங்கள் குழந்தைகள். அவர்களுக்கேற்றவாறு ஆசிரியர் நாரா நாச்சியப்பன் இந்தக் குழந்தைப் பாடல்கள் நூலை அற்புதமாக இயற்றியுள்ளார். ஒவ்வொரு பாடலிலும் நல் கருத்தும் சிந்தனையும் இனிமையும் துள்ளுகின்றன.
முஸ்லிம் முரசு
சிறுவர் சிறுமியரின் சிந்தையைக் கவரக் கூடிய விதத்திலே சிங்காரப் பாடல்களைக் கொண்டு விளங்குகிறது இச் சிறு நூல்.
“உண்மை பேசும் உத்தமனை உலகம் முற்றும் புகழ்ந்தேத்தும்” “பாடம் நன்றாய்ப் படித்தால் நீ பட்டம் பலவும் பெறுவாய்” என்பன போன்ற அடிகள், படிக்கும் இளம் உள்ளங்களில் பதிந்து அறிவூட்ட வல்லனவாக அமைந்துள்ளன.