பக்கம்:தாவிப்பாயும் தங்கக் குதிரை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



வீரமகனின் உறுதிமொழி


கடுமையாக உழைத்து அவர் சிறிது பணம் சேர்த்தார். போதுமான அளவு பணம் சேர்ந்தவுடன் ஒருநாள் காலையில் அவர் தன் மகனை அழைத்தார்.

அவர் கண்கள் கலங்கியிருந்தன. ஆனால், அவற்றிலே ஒரு நம்பிக்கை ஒளி வீசியது. ஓர் உறுதி வெளிப்பட்டது.

“வெற்றி வேலா, என் அன்பு மகனே! நீ நினைத்துக் கொண்டிருப்பது போல் நீ ஓர் உழவனின் மகனல்ல; நீ ஓர் இளவரசன்!” என்று கூறினார்.

வெற்றி வேலன் வியப்படைந்தான். “நான் இளவரசனா? அப்படியானால் என்னைப் பெற்ற அரசர் யார்? அரசி யார்?” என்று கேட்டான்.

“மகனே! உன்னைப் பெற்றவர் நாங்கள் தான்! ஆனால், நாங்கள் வஞ்சகத்தால் வாழ் விழந்தோம்!” என்று கூறிக் கோவென்று கூவி அழுதாள் அரசி,