இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கவிமணி
தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின்
வாழ்த்து
பள்ளிச் சிறுவர் சிறுமியர்கள்
- பாடிப் பாடி மகிழ்வெய்த
தெள்ளித் தெளித்த செந்தமிழில்
- தேனார் கவிகள் செய்துதரும்
வள்ளி யப்பா, நின்இனிய
- 'மலரும் உள்ளம்' என்றென்றும்
புள்ளி மயில்வா கனன்அருளால்
- புவியில் வாழ்க, வாழ்கவே.
'பாலும் பழமும் ஏனம்மா ?
- பசியே இல்லை' எனக்கூறிச்
சீலச் சிறுவர் சிறுமியர்கள்
- சிறந்த 'மலரும் உள்ளம்' இதைக்
காலை மாலை என்றென்றும்
- கற்று மகிழச் செயும்இந்த்ர
ஜாலக் கவிஞன் வள்ளியப்பன்
- தழைத்து வாழ்க, வாழ்கவே.
5