பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

181


அப்படிச் சொன்னால் சான்றோர் கொடுமை என்று பழி தூற்றுவர்.”

1799. “மானம் என்பது கிஞ்சிற்றும் இல்லாதவர்கள்தான் அவமானம் பற்றி ஆர்ப்பரிப்பர்.”

1800. “காயம்பட்ட காலில் கூச்சம் இருப்பதால் வலிமையுடன் எடுத்து ஊன்றாததால் மேலும் இடிபாடு உண்டாகும். காயம்பட்ட காலில் உள்ள பொய்ம்மையான அக்கறையால் அந்தக் காலைப் பயன்படுத்தாமல் வாளாவிடுவதால் பயன்பாட்டு நிலை இழந்து போகிறது. பட்ட காலிலேயே படும்.”

1801. “ஒருவருக்குக் கேடு வந்ததெனில் - கேடு வந்தவுடன், கேட்டிற்குரிய காரணங்களைக் கண்டு அறிவறிந்த ஆள்வினையை மேற்கொண்டு கேட்டினை நீக்கிக் கொள்ளாது வந்துள்ள கேட்டிற்குக் கவலைப் படுபவர்களை நோக்கிக் கூறியது” கெட்ட குடியே கெடும்’ என்பது.

1802. “மனம் கெட்டு உறவு கெட்டுப்போன குடியே கெடும். மற்ற கேடுகளால் அதாவது வறுமையால் பிணியால் ஒரு குடி கெட்டுவிடாது.”

1803. “செயலற்றுப் போன”-என்பதை விளக்குவது “படுட” என்ற சொல். உயிர்ப்பு குறைந்து செயலற்றுப் போன காலிலேயே மீண்டும் மீண்டும் பிணியும் செயலற்ற தன்மையும் தோன்றும் நல்ல உயிர்ப்புடன் செயலும் உள்ள காலில் பிணி வந்தாலும் நீங்கும். காலுக்கு உயிர்ப்பு உழைப்பால் வருவது.”

1804. “பிறப்பின் காரணமும் சூழலும் நல்ல வகையினதாக அமையாவிடில் நீங்காத் துன்பம் வந்து பொருந்தும்.”