இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4
சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த பேச்சாளர்களில் நூற்றுக்குத் தொண்ணூறு பேர் ஆண்டவனைப் பற்றியும், அடிக்கடி அவதாரங்களைப் பற்றியுமே பேசி வந்தனர். இந்த நூற்றாண்டில் வாழும் பேச்சாளர்கள், அரசியலைப் பற்றியும், விஞ்ஞானத்தின் அவசியத்தைப் பற்றியும் அன்றாடம் பேசிவருகின்றனர்.
அன்றைய பேச்சாளர்களின் சொற் பொழிவுகளிலிருந்தும், இன்றைய பேச்சாளர்களின் சொற்பொழிவுகளிலிருந்தும் நாட்டுக்குப் பயன்படும் நல்லபல கருத்துக்களைத் தொகுத்து என் மகன் கல்லாடனிடம் கொடுத்தேன். அவன், அதனை இப்போது ஒரு நூலாக வெளியிட்டிருக்கிறான்.
சொன்னார்கள் என்னும் இந்த ‘நாக்குநூல்’ கற்றவர்களுக்கும் பயன்படும். மற்றவர்களுக்கும் பயன்படும். மற்றவர்களுக்குப் பயன்படு வதைக் காட்டினும் மேடைப் பேச்சாளர் களுக்கு இது மிகவும் பயன்படும் என்றே கருதுகிறேன்.
சுரதா