உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இப்படி மானும் எண்ணுகையில்
எங்கிருந் தோஒரு சிங்கமுமே
‘குப்’பெனப் பாய்ந்து வந்ததுவே,
கொன்று மானைத் தின்றிடவே.

சப்தம் கேட்டுக் கலைமானும்
தாவிக் குதித்து ஓடியதே.
தப்பிப் பிழைக்க அதன்கால்கள்
தகுந்த உதவி செய்தனவே.

‘காற்றைப் போலப் பறக்கின்ற
கலைமான் தன்னைப் பிடிக்காமல்
தோற்றுப் போனது சிங்கம்’ எனச்
சொல்லி யிருப்பேன் கதைதனையே.

ஆனால், அந்த மானுக்கே
அதிர்ஷ்டம் இல்லை. ஆதலினால்,
தானாய் மாட்டிக் கொண்டதுவே,
தன்னுடை அழகுக் கொம்புகளால்!

ஓட்டம் பிடிக்கையில் வழியினிலே
உள்ள மரத்தின் கிளையொன்றில்
மாட்டிக் கொள்ளக் கொம்புகளும்
வகைதெரி யாமல் விழித்ததுவே!


32