உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குனிந்து ‘ஈக்பீக், ஈக்’எனவே
குரலை எழுப்பினன், எழுப்பியதும்,
“மனிதன் சத்தம் போடுதல்போல்
மடையன் இவனும் போடுகிறான்.

பன்றி இதுபோல் கத்தாது.
பார்ப்போர் தம்மை ஏய்க்கின்றான்”
என்றார் சிலபேர். மற்றவரும்
ஏளன மாகப் பேசினரே.

“கோமா ளியினைத் தோற்கடிக்கக்
கொஞ்சமும் முடியா” தென்றிடவே,
“ஆமாம், ஆமாம்” என்றுடனே
அனைவரும் கூச்சல் போட்டனரே.


சத்தம் கேட்டும் முனியாண்டி
சற்றும் தயக்கம் இல்லாமல்
வித்தை காட்டினன். ஆனாலும்,
மிகவும் கூச்சல் கேட்டதுவே.

கையைத் தட்டி அனைவருமே
கலகம் செய்தனர். முனியாண்டி,
“ஐயா, சபையில் இருப்பவரே,
அமைதியுடனே கேளுங்கள்”


24