பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

தவத்திரு அடிகளார்



1825. “இன்றைய தமிழர்களில்பலர் பெயரளவில் தமிழர். இவர்களுக்கு மொழி உணர்வு இல்லை.”

1826. “அரசியல் இயக்கங்களுக்கு பதவிசுகம், அதிகார ஆசை இருக்கும் வரை உருப்படியான சமூக மாற்றத்திற்குப் புரட்சி செய்ய மாட்டார்கள்.”

1827. “பல தவறுகள், பழக்கத்தை மாற்ற இயலாமையினாலேயே யாம்.”

1828. “தொழில் நுட்பத்துடன் கூடிய உழைப்பே பயன்தரும்”.

1829. “பணியார்வம் இல்லாமல் பிழைப்பைக் கருதுபவர்கள் பயன்பட மாட்டார்கள்.”

1830. “யார் மாட்டும் கடும்ப்கை கொண்டு அழிக்க முயன்றாலும் கேடு வரும்.”

1831. “இன்றைய உலகத்தில் சினவாமல் இருப்பதற்கு முயன்று, வெற்றி பெற்று விட்டால் அது ஒரு சாதனையே!”

1832. “விதிகள், முறைகள், நெறிகள் வாழ்க்கையின் படிப்பினைகளில் பிறந்தவை. அவற்றை நாம் ஏற்காது போனால் முன்னோர் பெற்ற தோல்விகளை நாமும் பெறுவோம்.”

1833. “பெரும்பாலும் அரிய சாதனைகளைச் செய்ய முயன்றோர் தனி மனித நிலையிலேயே செய்துள்ளனர். பந்திக்கு வருவது போல் அனைவரும் பணிக் களத்திற்கு வரமாட்டார்கள்.”

1834. “நாளது வரையில் உயரிய இலடுசீயங்களுக்காகப் போராடியவர்கள் சாகடிக்கப் பட்டே வந்துள்ளனர். அதில், அன்னை இந்திராகாந்தியும் ஒருவராகிவிட்டார்.”