இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
குழந்தைகட்குத் தொண்டுசெய்யும்
குணமும் மிக்கவர்.
செழுந்தமிழில் கவிதை செய்யும்
திறமை பெற்றவர்.
அழுங்குழந்தை கூட நல்ல
ஆனந்தங் கொள்ளப்
பழந்தமிழில் பாட்டுப் பாடும்
பண்பும் பெற்றவர்.
பருகும்பாலும் குழந்தைகட்குப்
பாவில் தருபவர்.
பொறுமைமிக்க அவரின் பாக்கள்
பொறுக்கு மணிகளாம்.
கருணையுள்ள வள்ளியப்பா
கவிதை வாழ்கவே.
அருமையான கவிஞர் வள்ளி
யப்பா வாழ்கவே.
4