உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முதுமைக் காலத் தொல்லை பூச்சிகளினால் ஏற்படும் தொல்லை நீங்கி நலமுடன் வாழலாம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொல்லை நீங்கி நலமுடன் வாழலாம்

33


அதனால் மனிதன் பலவிதமான நோய்களை முதுமைக் காலத்திலே சுமக்கும் சுமை தாங்கியாக மாறுகிறான். அதன் எதிரொலிதான். அவன் பலவிதமான நோய்களை அடையும் நிலை வருகின்றது.

என்ன நோய் அது என்று கேட்பீர்கள். ஏனென்றால், இந்தக் காலத்துத் தலைமுறைகளின் அறிவு ஏறுக்கு மாறாக நடப்பதால் தங்களது விருப்பம்போல. ஏதோ புத்தி சாலித்தனமாகக் கேட்பதைப் போலக் கேட்பார்கள்! அவர்களது அறிவு தளர்ச்சி யாரை, என்ன கேட்கிறோம் என்பதையே உணர மாட்டார்கள் அவ்வளவு அறியாமை எழுச்சி பாவம்!

இங்கிலாந்து நாட்டிலே உள்ள டாக்டர்கள் சிலர் ஒரு புதிய கருவியைக் ண்டுபிடித்திருக்கிறார்கள். இந்தக் கருவிகள் டாக்டர்களுக்கு உதவியாக இருக்கும் புதிய கருவிக்கு “பிரீதலைசர்” என்று பெயராம்.

“தெர்மா மீட்டர்” உடல் வெப்ப அளவைக் காட்டுவது போல், "ஸ்டெதாஸ் கோப்” இருதய துடிப்பைக் காட்டும் அளவைக் காட்டுவது போல், இந்தக் கருவி நோயாளிகளுக்கு இருப்பது என்ன வியாதி என்ப்தை டாக்டருக்குத் தெரிவித்துவிடும்.

நோயாளிகளின் சுவாசக் காற்றை வைத்தே நோயைக் கண்டுபிடித்துவிடுவதுடன் அந்த நோய்க்கு என்ன மாத்திரை, மருந்து கொடுக்க வேண்டும் என்பதையும் துல்லியமாகத் தெரிவிக்கும்.

போதையில் காரை ஓட்டுகிறாரா என்று உடனடியாகக் கண்டுபிடிக்கவும் போலீசாருக்கு இந்த "டயக்னோஸ்டிக் பிரிதலைசர்” கருவி உதவுகிறது.