இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முதலுக்கே மோசம்
❖
யோகி ஒருவர்,
வெள்ளிக்கிழமை
விடியற் காலம்
தண்ணீரில்தான்
நடக்கப் போவதாய்
விளம்பரம் செய்தார்;
வேண்டிய மட்டும்
காணிக்கை அவர்
காலில் குவிந்தது.
பிறகு
குறித்த நாளில்
குறித்த நேரத்தில்
நீரில் யோகியார்
நிசமாய் விழுந்தார்.
விழுந்தெழுந்து
எழுந்து விழுந்து......
பிறகு தரையில் நடக்கவும்
முடியாது போனார்!
43