பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆறுமுகமான பொருள்

1




1
ஆறுமுகமான பொருள்


நானும் சில நண்பர்களும் ஒரு பிரபல நாடகக் கம்பெனியார் நடத்திய 'குமார விஜயம்' என்னும் நாடகத்திற்குச் சென்றிருந்தோம். நாடகத்தில் ஒரு காட்சி, குன்றுதோறாடும் குமரன் மலைமீதிருந்து கீழிறங்கி வரும் காட்சி, ஆறுமுகனான கந்தன் வேடத்தை ஒரு சிறு பையன் ஏற்றிருக்கிறான். ஒரே முகம் உடைய அந்தப் பையனை ஆறுமுகம் உடையவனாகக் காட்ட ஐந்துமுகங்களை அட்டையில் எழுதி அந்த முகங்களையும் இருக்கிற தலையிலே பிணைத்திருக்கிறார்கள். மலையினின்று இறங்கி வரும் இந்த ஆறுமுக வேடதாரி, ஒரு சிறு தோரண வாயிலைக் கடந்து வெளிவர வேண்டியிருக்கிறது. குனியாமல், நிமிர்ந்து வந்தாலோ ஆறு முகங்களில் ஒன்றிரண்டு முகங்கள் கட்டாயம் தோரணவாயிலில் சிக்கிக் கொள்ளும். இந்த இக்கட்டான நிலையில் ஆறுமுகம் கொண்டிருந்த அந்தப் பையன் மிக்க லாவகமாக முதலில் இரு பக்கத்து அட்டைத் தலைகளை ஒருக்களித்துத் தோரணவாயில் வழியாக வரவிடுத்துப் பின்னர் மற்றைய பக்கத்துத் தலைகளையும் வெளிக்கொணர்ந்து தோரண வாயிலைக் கடந்து விடுகிறான். இதனைப் பார்த்த என் நண்பர்கள் எல்லாம் கலகல என்று சிரிக்கின்றனர். பாவம், இந்தப் பையனை ஆறுமுகம் உடையவனாக்க ஐந்து தலைகள் வைத்துக் கட்டப்பட்டதனால் அல்லவா இத்தனை கஷ்டம் அந்தப் பையனுக்கு. இந்தக் குமரனுக்கு ஆறு தலை என்று கணக்கிடுவானேன் என்று கேள்வி கேட்கிறார், ஒரு நண்பர்.

இதற்குப் பதில் சொல்கிறார் மற்றவர். "இது தெரியாதா உனக்கு. கைலாசபதியாகிய பரமேசுவரன் இமவான் மகளாகிய உமையை