இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பொக்கை வாய்ச்சிரிப்பால் - இந்தப்
பூமியில் உள்ளோரைக்
கைக்குள் அடக்கிவிட்ட - காந்தி
கடற்கரைச் சென்னைவந்தார்
காந்தியைக் காண்பதற்குப் - பாரதிக்
கவிஞன் சென்றிருந்தான்
மாந்தருள் தெய்வத்தைக் - கவிதை
மன்னவன் வாழ்த்திநின்றான்
39