பொங்கல்

விக்கிமூலம் இலிருந்து


காடு[தொகு]

ஆடிப் பட்டம் தேடி விதைத்தேன்.
அவரை மொச்சை காட்டில் போட்டேன்.
துவரைப் பயிரும் துணையாய்ப் போட்டேன்.
பயிர் முளைத்தது, பசுமை கண்டது.
ஆவணி வந்தது, மழையும் பெய்தது.
அதனால் எல்லாம் நன்றாய் விளைந்தது.
விளைந்த பலனை வீட்டில் சேர்த்தேன்.
பசி தீர்ந்த்து, பணமும் வந்தது.

தோட்டம்[தொகு]

அதோ பார் எங்கள் தோட்டம்.
சுற்றி இலுப்பை மரங்கள் உள்ளன.
மாமரம் ஐந்து நடுவில் உள்ளன.
ஒன்பது தென்னை ஓரம் உள்ளன.
பெரிய கிணறு நடுவில் உள்ளது.
நீர் இறைத்தேன், நன்றாய் வளர்ந்தன.
பாடு பட்டேன், பலன் கண்டேன்.
செல்வம் சேர்ந்தது, ஈகை வளர்ந்தது.
மக்கள் யாவரும் மகிழ்ந்து வாழ்த்தினர்.

வயல்[தொகு]

ஊர் அருகில் எங்கள் வயல்.
உழவு மாடு இரண்டு உண்டு.
நன்கு உழுது நாற்று நட்டேன்.
நீர்ப் பாய்ச்சி எரு போட்டேன்.
களை எடுத்துக் கண்போல் காத்தேன்.
கதிர் விட்டு மணி விளைந்தது.
களத்தில் நெல் அடித்துக் குவித்தேன்.
காசு வந்தது, கவலை பறந்தது.

பொங்கல்[தொகு]

தை மாதம் பொங்கல் வந்தது.
மங்கலப் பொங்கல் எங்கும் உண்டு.
பொங்கல் வைத்துச் சூரியனை வணங்கினோம்.
உழைப்பின் பயனை உண்டு களித்தோம்.
மக்களுக்கு உழைத்த மாட்டைப் போற்றினோம்.
மனைவி, மக்கள் யாவரும் மகிழ்ந்தோம்.
உழைப்பு உயரும் உண்மை கண்டோம்.
வாழ்க பொங்கல், வாழ்க வையம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பொங்கல்&oldid=27172" இலிருந்து மீள்விக்கப்பட்டது