இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நல்ல கதைகள்
6
பாடிக் கொண்டிருந்தது. கற்பனை அதற்கு இதமாக தாளம் போட்டுக் கொண்டிருந்தது.
வகுப்பில் உட்கார்ந்திருக்கிறோமே. ஆசிரியர் அருமையாகப் பாடம் சொல்லித் தந்து கொண்டிருக்கிறாரே என்ற எண்ணம் அவனுக்கு எழவில்லை.
வகுப்பின் கடைசியிலே, ஒரு மூலையில்தான் கண்ணன் எப்பொழுதும் உட்கார்ந்திருப்பான். 'மாப்பிள்ளை பெஞ்சு' என்று அதற்குப் பெயர். கண்ணனுக்கு அந்த இடம்தான் எப்பொழுதும் பிடிக்கும்.
மூலையில் உட்கார்ந்திருக்கும் அவனது மூளை, வேறு எதையாவது தான் யோசித்துக் கொண்டிருக்கும். பாடமோ, ஆசிரியர் போடும்