இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
72
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
சக்தியும் சாமர்த்தியமும்
நமக்கென்று சில சக்தியும், சாமர்த்தியமும் உண்டு.
நிச்சயம் நாம் நம்பித்தான் ஆகவேண்டும். நம்பிக்கையற்றவன் நடைப்பிணம் போன்றவன்.
நமக்குள்ள சக்தி, திறமை, சாமர்த்தியம் என்ன வென்று முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது அவைகள் அன்றாடம் நாம் செய்கின்ற செயல்களிலே தொனித்து நிற்கும், தனித்து நிற்கும். சில சமயங்களில் செழித்தும் நிற்கும்.