இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கடவுள் கைவிட மாட்டார்
83
மறுநாள் இராமேசுவரத்திற்குத் தருமலிங்கமும் மீனாட்சியும் வந்தார்கள். அவசர அவசரமாக போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனார்கள். அங்கிருந்த இன்ஸ்பெக்டரிடம், தன் வைரக்கற்களை அடையாளம் காட்டினார் புகாரும் எழுதித் தந்தார் தருமலிங்கம்.
தருமலிங்கத்தின் நண்பர்தான் அந்த இன்ஸ்பெக்டர். இருவரும் ஒரே பள்ளிக்கூடத்தில் படித்தவர்கள். நண்பருக்கு உதவி செய்ய தன் கடமையை சரிவர நிறைவேற்ற கிடைத்த சந்தர்ப்பம் குறித்த திருப்தி, அவர் முகத்தில் தெரிந்தது.
தனது நகையும் வைரக்கற்களும் நடேசனால் கடத்தப்பட்டுவிட்டது என்று தருமலிங்கம் பதறியபோது கணக்கப் பிள்ளை ரகசியமாகப் பேசினாரே! அவர் தெரிவித்த யோசனை இதுதான்