73
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
1932ம் ஆண்டு லாஸ் ஏஞ்செல்ஸ் எனும் இடத்தில் நடந்த ஒலிம்பிக் பந்தயங்களில், 10,000 மீட்டர் ஓட்டப் போட்டி நடைபெற்றது. உலகப் புகழ்பெற்ற வீரர்கள் பலர், இந்தப் போட்டியில் கலந்து கொண்டிருந்தனர்.
வெற்றி பெற்று விடவேண்டும் என்ற வைராக்கிய நெஞ்சுடன், ஜப்பான் தேசத்திலிருந்து ஒரு வீரன் வந்திருந்தான். பார்வைக்கு ஒல்லியாகவும் குள்ளமாக வும் இருந்த அந்தவீரன், ஓட்டம் தொடங்கியவுடனே, தன் நம்பிக்கையை இழக்கத் தொடங்கினான்.
என்னதான் இவன் வேகமாக ஓடினாலும், மற்றவீரர்கள் இவனை பின்னால் தங்கவிட்டு விட்டு வேகமாக ஒடியதுமல்லாமல், ஒரு சுற்றுக்கும் (Round) முன்னால் இருப்பதுபோன்ற வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தனர். ஜப்பானிய வீரனோ தன்னந் தனியனாக ஓடினான். சீக்கிரம் ஒடிச் செல்ல வேண்டும் என்பதற்காக முதல் ஓட்டப் பாதையிலேயே (Lane) ஓடிக்கொண்டிருந்தான்.
அவனது வலதுபுறமாகப் போய்கடந்துதான் மற்றவர்கள் முன்னேறி ஓடவேண்டும். அப்படி மற்றவர்கள் அவனைச் சுற்றி ஓடினால், அவர்கள் அதிக தூரத்தைக் கடக்க வேண்டி நேரிடும். அதனால் அதிக நேரம் ஓடி முடிப்பதாக ஆகிவிடும் என்பதை உணர்ந்த அந்த வீரன், தான் வாழாவிட்டாலும், மற்றவர்களாவது நன்றாக வாழட்டும் என்று முடிவு செய்தான். அதற்காக ஓடும் வழியையும் தாராளமாக விட்டான்.
“முதல் ஓட்டப்பாதையில் ஓடினால்தானே, மற்றவர்கள் தன்னை முந்துவதற்காக, இரண்டாம் ஒட்டப் பாதையில் போய் ஒடிச்செல்ல வேண்டும்! அப்படியில்லாமல், தான் மூன்றாவது பாதையில் ஓடினால் மற்றவர்கள் முதலாவது பாதையில்