உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துணிந்தவன்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 29 'பாலு என்னைப் பற்றி உங்ககிட்டே சொல்ல லேன்னு சொன்னானே?" 'அவன் சொல்லலே....” 'பின்னே : “எனக்கு மந்திரம் தெரியும்!" 'போங்க லார் உங்களுக்கு மந்திரமும் தெரியாது, ஒரு மண்ணும் தெரியாது. அதுதான் முதல்லேயே புரிஞ்சு போச்சுதே. பெண்ணைப் போயி பையன்னு சொன்னிங் களே, அப்பவே..... எப்படித் தெரியும், சொல்லுங்க லார்' அவள் குரலில் கெஞ்சலே மிகுந்திருந்தது. 'எப்படியோ தெரியும்' என்று சொல்லி, குறும் பாகச் சிரித்தான் அவன். 'எப்படி ஸ்ார்.... சொல்லுங்களேன்.... ஐயோ, தயவு செய்து சொல்லுங்களேன்!” 'எப்படியா? ...... வந்து..... அனுபவத்தினாலே தான்!” குறும் புச் சிரிப்பு நீங்காது நின்றது அவன் உதடு களில். - 'சொல்ல மாட்டீங்களா?” 'தமிழ்நாட்டில்...." 'என்னவோ கேட்டால் நீங்க தமிழ்நாட்டிலேன்னு பிரசங்கம் பண்ண ஆரம்பிக்கிறீங்களே!' என்று அலுத்துக் கொண்டாள்.அவள். 'அவசரப்படாமல் நான் சொல்வதைக் கேளேன். தமிழ் நாட்டில் பார்க்கப் போனால், கேரளம், ஆந்திரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/41&oldid=923514" இலிருந்து மீள்விக்கப்பட்டது