உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விவாகரத்து தேவைதானா.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

விவாக ரத்து உரிமையினால், நன்மையை விடத் தீமையே அதிகம் உண்டாகிறது. அதனால், சமுதாய நலம் பாதிக்கப்படுகிறது. ஆகவே, கூடிய வரை, விவாக ரத்துக்களைத் தவிர்ப்பதே சிறந்தது என்கிற நோக்கம்தான் இந்த அமைப்புக்குக் காரணம்.

விவாக முறிவுகளைத் தடுப்பதற்கு, முதலில் பொருந்தா மணங்கள் நிகழாமல் தடுக்க வேண்டும். திருமணம் இன்பம் தரும் கல்யாணங்களாக விளங்க வேண்டும். கல்யாணம் பற்றிய பலவித எண்ணங்களையும், விரிவாக வேறு புத்தகங்களில் குறிப்பிட்டிருக்கிறேன்.[1]

கல்யாணமான பிறகும் கூட, கணவன் மனைவியை தன் காம இச்சைக்கு உரிய மனித மிஷினாகவோ, குளிர் காய உதவுகிற கணப்பு ஆகவோ, தனக்குப் பணிவிடை செய்ய வந்து சேர்ந்த அடிமையாகவோ கருதாமல், அவளும் வாழ்க்கையை அனுபவிக்க விரும்புகிற பெண் என்று மதித்து அன்புடன் பழக வேண்டும். மனைவி ஒரு புதுமை எனும் நிலை நீடிக்கும் ஆரம்ப மாதங்களில்


  1. 1. கல்யாணம்-இன்பம் கொடுப்பதா?
    இன்பத்தைக் கெடுப்பதா?
    (வல்லிக்கண்ணன்) விலை அணா-3.

    2. நல்ல மனைவியை அடைவது எப்படி?
    வல்லிக்கண்ணன் எழுதியது. விலை அணா-3.