உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாராயணன்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொந்தரவினால் அல்லவா "நான் அடித் தேன்," என்று மிகவும் இரக்கத்தோடு கூறினான்.

அப்போது ஒரு சிறுவன் நாரா யணனை நோக்கி, "நாங்கள் எல்லோ ரும் விளையாட்டுக்குக் கல்லால் அடித் தோம். உன்னைப்போல் ம ர த் தி ல் உள்ள பழம் விழும்படியாகவா அடித் தோம்," என்றான்.

உடனே மற்றொரு சிறுவன்," அது கிடக்கட்டும், இந்த நாராயணன் நம் முடைய தொந்தரவால் கல்லால் அடித் ததாகக் கூறுகின்றானே - இ வ் வ ள வு பேசுகின்ற இவனுக்கு அறிவு எங்கே போயிற்று," என்றான்.

நாராயணன், அப்போது மிக்கவருத் தத்தோடு, "ஆம் ; உங்கள் சொல்லை நம்பியது எ ன் மே ல் தவறுதான். நாளைக்கு நம் ஆசிரியரேனும் என்மீது பிழையில்லை என்பதைத் தெ ரி ந் து கொள்ளமாட்டாரா," என்றான்.

உடனே ஒரு சிறுவன், " அடே மாணிக்கம், நா ளை க் கு நாராயணன்

9
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாராயணன்.pdf/12&oldid=1338904" இலிருந்து மீள்விக்கப்பட்டது