உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீ சிரித்த வேளை

15



பாரிஸ் கார்னர் வரை போய்த் திரும்பிடுறேன், மிஸ், ஊர்வசி!". ஊர்வசி சலனத்தின் பிசிறு எதுவும் தடம் காட்டாத ஒரு பார்வையை நம்பிக்கையோடு அவன் பேரில் வீசி விட்டுப் புத்துணர்வுடன் மூரல் சிந்தின்ாள். "ஆல் ரைட் யூ மே டேக் யுவர் ஒன் டைம்!" என்று விடை அளித்துவிட்டு, கூடை நாற்காலியில் வெகுசுவாதீனத்தோடு குந்தினாள் ஊர்வசி, பூக்கள் மலர்ந்து சிரித்த மாம்பழ வர்ண நைலக்ஸ் புடைவையைச் சீர்ப்படுத்திக் கொண்டாள். அவளை நோக்கி, அதிசயப்பட்ட நிலையில் மீளவும் பார்த்துவிட்டு, விமரிசனத்தாள்களோடு அங்கிருந்து கிளம்பினான் அம்பலத்தரசன். “ஊர்வசி, கதவை நன்றாகத் தாளிட்டுக்கங்க!" என்று எச்சரித்தான் அவன். சுருட்டை மயிர்கள் சில நெற்றித் திட்டில் தட்டின்றிப் புரண்டன. - கதவு திறந்தே கிடக்கட்டுங்க. நீங்க நிம்மதியாய்ப் போய்த் திரும் புங்க. நான் உங்க ரூமுக்குக் காவல் இருப்பேன், நாணயத்தோடு," என்றாள் அவள். ஒர் உறுதிப்பாடு மிளிர்ந்தது பேச்சில், கழுத்துச் சங்கிலி மார்பிடைப் பதிந்திருந்தது.தீப்பெட்டி கிடைத்துவிட்டது. இதழ்க்கங்கில் நகை மிளிர, அந்நகை இணைப்பில் சிகரெட்டுப் புகை இழைய, அங்கிருந்து புறப்பட்டான் அம்பலத்தரசன். முத்துமாரிச் செட்டித் தெரு வழிவிட்டது!