36
பூவை எஸ். ஆறுமுகம்
"அப்புறம் உன் திட்டம் என்ன, ஊர்வசி?" மேஜையின் அடித்தளத்தில் தன்னுடைய எழிலார்ந்த நெஞ்சைப் பதித்து ரேடியோவைக் கேட்டுக் கொண்டிருந்தவள், எழுந்து அவனைப் பார்த்துக் கொண்டே, "என்னையே உங்ககிட்ட நான் ஒப்படைச்சிட்ட பிற்பாடு, தனியே பிரிச்சு என்கிட்ட என்னோட திட்டத்தைப் பத்திக் கேட்கிறீங்களே?" என்று சொன்னாள்.
"நீ சொல்றது. மெய்தான். அதற்காகச் சொல்லலே. மேற்கொண்டு என்ன நடக்க வேணுமிங்கிறதைப் பற்றி நான் தெரிஞ்சுக்க வேணு மில்லையா, அதுக்காகவே கேட்டேன்" என்று தன் கேள்விக்கு விளக்கத்தை எடுத்துக் காட்டினான் அம்பலத்தரசன்.
அவள் என்னவோ சொல்ல வாயெடுத்தாள். அந்நேரத்தில், கீழ்த்தளத்தில் இருந்த வீட்டின் சொந்தக்காரர் மாடிக்கு வந்து சேர்ந்தார். அன்றாடப் பத்திரிகைச் செய்திகளை இனாமாகப் படித்துச் செல்லும் மாமூல்படி அன்றும் வந்தார் அவர். அவருக்கும் பெயர் உண்டு. அது, குஞ்சித பாதம் என்பதாகும். வந்த மனிதர் தம்முடைய பன்றி முடியை நரை திரண்டிருந்த அம்முடியை இடது கை விரல் கொண்டு கோதிவிட்டவராக, ஊர்வசியை 'ஒரு மாதிரி யாக 'ப் பார்த்தார்.
'இந்த நாடகக்காரி எங்கே இங்கு வந்தது?’ என்ற ஐயப்பாட்டோடு அவர் பார்வை இருந்ததை அம்பலத்தரசன் ஊகம் செய்துகொள்ளத் தவறவில்லை.
"ராத்திரி நாடகத்திலே நடிச்ச பெண்தானே இது?" என்று கேட்டார் குஞ்சித பாதம். - -
"ஆமாங்க, அந்தப் பெண்ணேதான். எனக்குச் சொந்தம். முறைமைக்காரப் பெண்ணுங்கூட," என்றான் அம்பலத்தரசன். வீட்டுக்காரர் உண்டாக்கிய அதிர்ச்சி இன்னமும் அப்படியே இருந்தது.
"ஓஹோ உங்க அம்மா ஊரிலே பிருந்து லெட்டர் போட்டிருந்ததாகச் சொன்னிங்களே, அது இந்தப் பொண்ணைப் புத்தித்தானா லார்?"
ஆமாங்க!"