182
- திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை
யாழ்ப்பாணம்
37. தாத்தா தான்ந் தத்தன தனதன தாத்தா தான்ந் தத்தன தனதன தாத்தா தான்ந் தத்தன - தனதான்.
பூத்தார் சூடுங் கொத்தலர் குழலியர்
பார்த்தால் வேலும் கடகமும் மதன்விடு போர்க்கார் நீடும் கட்சர மொடுநமன் விடுதூதும்
போற்றாய் நாளும் கைப்பொருள் உடையவர்
மேற்றா ளார்தம் பற்றிடு பிரமையது பூட்டா மாயம் கற்றமை விழியினர் அமுதுறல்
வாய்த்தார் பேதம் செப்புபொய் விரகியர் நூல்தேய் நூலின் சிற்றிடை இடர்பட வாட்டாய் வீசுங் கரப்புர மிருகமதம் அகிலார
மாப்பூண் ஆரங் கச்சணி முலையினர்
வேட்பூண் ஆகங் கெட்டெனை உனதுமெய் வாக்கால் ஞானம் பெற்றினி வழிபட அருளாயோ!
ஆத்தாள் மால்தங் கச்சிக விகையுமை கூத்தா டாநந் தச்சிவை திரிபுரை ஆட்பேய் பூதஞ் சுற்றிய பயிரவி புவனேசை
ஆக்கா யாவும் பற்றின் திரிபுர -
நோக்கா ஏதுஞ் செற்றவள் திருவிளை ஆட்டால் ஈசன் பக்கமது உறைபவள் பெறுசேயே!
ஏத்தா நாளுந் தர்ப்பண செபமொடு
நீத்தார் ஞானம் பற்றிய குருபர யாப்பா ராயுஞ் சொற்றமி ழருடரு முருகோனே!