பகுதி) ம தி வா ண ன் 253
டியனது அந்தப்புரத்திலுள்ள மகளிர்க் கிடையே சென்று சேர்ந்தான். சேர்க் துழி வேந்தனணேயின் வண்ணம் ஆண்டு வேய்ந்துளதோ ரிருக்கையின் கண் விற்றிருந்தனன், இருந்த மதிவாணனக் கண்டமகளிரெல்லாம் உள்ளத்து .. உவகை பொங்கிப் புன்முறுவல் பூத்தனர். *. அப்போழ்தத்துக் கன்னிமாடத்தினின்றும் பாங்கியர் பலர் புடைசூழ இன்பவல்லியும் போந்து கோப்பெருந்தேவியின் அருகர் கின்ருள். உடனே -
வேம்பனுக் தன்வயிற் பிறந்த கரும்பனேய கன்னியைச் சுட்டி, மதிவாண! இவளையன்றே கோண்டல் வேட்டது ?" என்று கூறலும் மதிவாணன் ஐயனே! இந்நங்கையை யன்றே யான் கைப்பிடித்தல் வேட்டது' என்றனன். தான் படத்தினிற் கண்ட காரிகையைக் கண்ணெதிரே காணப்பெற்ற மதிவாணன், தன்பால் நிகழ்ந்தமெய்ப் பாட்டினே யடக்கும் வலியின்றி யுழலு வான் புன்முறுவல் பூத்தான். இன்பவல்லியும் இடையிடையே தனது காத லனைக் கட்கடையால் நோக்குவாள்; உள்ளங்களிப்பாள்; இளநகை யரும்பு வாள்; ஒருபுறந்திரும்புவாள்; பெருந்தேவியின் புறத்தே காணத்தினுற்றனது முகத்தினேக் காப்பாள்.
இவ்வாறு சிறிதுபோழ்து கழிந்தது. அதன்மேல் இன்பவல்லி, பெர்ள் ளெனப்போந்து, மதிவான வள்ளலைத் தாளின்கட் பணித்தாள். அதனை யெதிர்பாராத அருந்தமிழ்க் குரிசில் மதிவாணனும் இறும்பூது கூர்ந்து இன்ன செய்வதென் றறியானுய்ச் செழியனே யொருமுறை யேறட்டுப் பார்த்துத் தன் இருகரங்களானும் கங்கையர் தலைமணி இன்பவல்லியை வாரியெடுத்தலும் அவள் அவன் அருகரிருந்த தோராதனத்தின்கண் இருத்தனள். -- அதன்பினர் வழுதி'ஐயா மதிவாண நம்மிருவர்க்கும் யாங்கள் எமக் குள்ளே மனவினேசெய்து முடிக்கவேண்டுமென்றுகருதியதற்கேற்ப ஆலவாய்ப் பெருமானடிகளருளினல் விேரிருவருங் காதலுறுவிராயினிர். காத லில்வழிச் செய்யுங் கடிமணங் கடியப்படுவதொன்றன்ருே? 'நூம்மிருவர்க்கும் எங்கே மெய்க்காதல் நிகழாது போய்விடுமோ? என்று எங்குவேன் வயிற்றில் தனிப் பெருங் கடவுளார் பாலைப் பெய்தனர்” என்று சொல்லிக்கொண் டிருக்குமள வில், மதிவாணன் தாதையார் தஞ்சைவாணர் மதுரைமா நகரம் போக்தனர்' என்ற செய்தி அரசன் செவிகளில் வீழ்ந்தது. உடனே யாவரும் எழுந்தனர். மீனவர் கோமான் மதிவாணன் ஆண்டேயிருக்கும்படி பணித்துவிட்டு ஞெரே லென வெளிச்சென்றனன். அவ்வமையத்துப் படைகின்ற மகளிருங் கோப் பெருங் ேதவியோட கன்றனர். •
அங்கிலையில் தனித்திருந்த இன்பவல்லி சிறிதுவெரூஉக்கொண்டனளா பினும் அதனை யண்ணல் மதிவாணன் அறியாது மறைத்தனள். சிறிது கோம் ஒருவரோடொருவர் பேசாதுநம்பியும் கங்கையும் வாய்வாளாமைமேற்கொண் டனர். அதன்மேல் மதிவாணன் இன்பவல்லியை யணுகி, என்னுயிர்க்காதலி நீ நிறம் வேறுபடக் காரணமென்ன? எங்தையார் இவ்வாயின் முதலமைச்