உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 இந்தச் சோதனைகள் விதிக்குச் சொந்தமா?-இல்லை, தெய்வத்திற்குத்தான் உரிமையா? தவிர்க்கமுடியாத ஒரு விபத்து மாதிரி அமைந்துவிட்ட அந்தச் சோதனையைச் சமாளித்தாக வேண்டிய ஒரு நிர்ப்பந்தத் தோடு, அம்பலத்தரசன் மாடியிலிருந்த தன் இருப்பிடத்தை அடைந்தான். திறந்திருந்த மாடியின் வழியை அடைத்து வரத் திரும்பி மீண்டான். அறைக்கதவுகள் திறந்தபடியே இருந்தன. "மிஸ் ஊர்வசி!" என்று கூப்பிட்டான் அவன். எடுத்த எடுப்பில் அவனது பார்வைக்கு இலக்கானது அவளுடைய ஒயில் மண்டிய முதுகுப் புறம்தான். இடைவெளி விட்டிருந்த முதுகுப் பகுதியின் மேல் வசமாக ஒரு பெரிய நகக்கோடும் தென்பட்டது. நிலாக்கோடு அந்த நகக்கோட்டில் அழகாக விழுந்திருந்தது. கழுத்துச்சங்கிலியின் தங்கச்சரம் வரம்பு கட்டியிருந்தது. - அவன் தொடுத்த குரல் அவளுக்குக் கேட்கவில்லை போலும்! அவள் தன்பாட்டில் என்னவோ எழுதிக் கொண்டிருந்தாள். அவன் மூச்சுவிடாமல் அறைக்குள் நுழைந்து, அங்கு கிடந்த ஒரு பிரம்புச் சோபாவில் உட்கார்ந்து கொண்டான். காலடியில் விழுந்து கிடந்த அன்றையச் செய்தித்தாளை எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டு அதை மேஜையின் மறு ஒரத்தில் பதமாக வைத்துவிட்டு, ஊர்வசியைப் பார்த்தான். இன்னும் கூட, அவன் வந்ததையோ, அல்லது வந்து அமர்ந்ததையோ அவள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. அவள் சிந்தை பூராவும் அவள் செயலிலேயே கட்டுண்டிருந்திருக்க வேண்டும்! எழுதிய தாளின் அடியில் எஸ்.ஊர்வசி என்று கையெழுத்துச் செய்ததை அவன் கண்டான். “குமாரி ஊர்வசி!..."என்று மெல்லிய குரலெடுத்துக் கூப்பிட்டான் அம்பலத்தரசன். அவள் தலையை உயர்த்தி நோக்கினாள். குமாரி ஊர்வசி!..." என்று வேதனையின் விரக்தியுடன் தனக்குத் தானே