பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது திருப்புகழ் உரை 407 மனமகிழ்ச்சியுடன் உள்ளக்குளிர்ச்சியுடன், நல்ல பயனைத் தரக்கூடிய தருமங்களைச் செய்து, மன ஒடுக்கம் அடைந்து உன்னை பணிதலுற்று மகிழ மாட்டேனோ! திமிந்தி என்னும் ஒலியுடன் கொடிய (கணங்கள் குணங்கர்) குணங்கர் கணங்கள்). பிச்ாசுக் கூட்டங்கள் (அலகைத் திரள்கள் பல வகையனவும் குழும்பி) ஒன்று கூடி (திரண்ட சதியும் புரிந்து) கூட்டமாக நின் ് புரிந்து) தாள ஒத்து இட்டுப், பழையவனான சூரனுடைய (சிரம்) தலை, கை, இவை யாவற்றையும் (குடைந்து) நோவு படச் செய்து, ம்ாமிசம் கொண்ட குடலைத் தொளை செய்து, கோபங் கொண்ட கரு னே (அந்தச் சூரனுடைய மிக்குப் பெருகும் ரத்தத்தில் | அமிழ்ந்தும், நிரம்பப் பிணங்களை (அயின்று) உன்டு மகிழ்ச்சி பூண்டு நெருங்க தாக்கும் வேலாயுதத்தை முன்பு செலுத்திச் சண்டை செய்த வேளே! மாலையாக வெண்கடம்பு மாலையை அணிந்து உன்னுடன் கூடின மலை நிலைத்துப் பெண்ணாகிய வள்ளியை முன்பு திருமணஞ் செய்து கொண்டு கூடின. பெருமாளே! (நினையும் பணிந்து மகிழ்வேனோ) 1168. அசுரர்களுக்கு ஒரு காலனாக (யமனாத) ஏற்பட்டவனே (ஜேஜெய்) உன்க்கு வெற்றி திகழ்வதாக வெற்றி திகழ்வதாது (நீ வ்ெல்க்வெல்க என்றபடி, தேவ்ர்கள் போற்றித் துதிக்கும் வேலனே நீ வெல்க வெல்க பரிசுத்த மூர்த்தியாம் சிவனுடைய ஒப்பற்ற குழந்தையே! நீ வெல்க வெல்க வீரம் வாய்ந்த பெரிய வேலாயுதத்தைப் படையாகக் கொண்டவனே! நீ வெல்க வெல்க என்றெல்லாம் இரவும் பகலுமே நான் நிரம்ப உன்னுடைய (தாள் தொழுமாறே) திருவடியைப் பணிந்து போற்றும் படி, இனித் தாமதிக் காமலேதான் "சிர மலை விழுங்கச் செந்நீர் திரைகடல் பருகலாகப் பிரமனை வேண்டிப்பின்னும் பெரும்பசி பெறவும் வேண்டும்" - கலிங்க, பரணி அவதா. 75 O போர்க்களத்தில் கழுகும், பருந்தும் வந்து உண்பது 'வான்சிறைக் கழுகும் பாறும் வயிறுகள் பீறிப்போன" . கலிங்க அவதர் 73

  • வள்ளியும் கடம்ப மாலை அணிவாள் - "குழல்சேர் கடம்பு தொடை அரசி" - திருப்புகழ். 636