70 காரும் தேரும்
கங்கைத் துறைவன் பொறையன் தமிழ்நாடன் சோணாட்டு இறைவன் திருப்பவனி என்றாள்
-இராசராச சோழனுலா : 189. என்றும், தக்கயாகப் பரணியில்,
என்னுஞ்சமண் முகருநான் மறையோ ரேறுந்தமிழ் நாடனும்
-தக்க : கோயிலைப் பாடியது: 76
என்றும், தனிப்பாடலில் தென்னன் தமிழ் நாட்டைச் சிறியோ' என்றும் தமிழ்நாடு என்ற சொல்லைப் பெய்துள்ளார்.
பதினேழாம் நூற்றாண்டின் இணையிலாத பெரும் புலவரான குமரகுருபரர் தம் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழில்.
தடம்பணை விரிந்த தமிழ்நாடு
-சப்பாணிப் பருவம் : 4
==
என்று பாடியுள்ளார். பரஞ்சோதி முனிவரின் திரு விளையாடற் புராணத்தில்,
பருங்கை மால்வரை பூழியன் பைந்தமிழ் நாட்டின்
-இரசவாதஞ் செய்த படலம் : 2
என்ற - தொடரில் 'தமிழ் நாடன்' என்ற சொல் வந்துள்ள
இருபதாம் நூற்றாண்டுப் புலவரான பாட்டுக்கொரு புலவராம் பாரதியார், -
செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே