உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூவையின் சிறுகதைகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய3ன் சனிக்கைாழ

இதோ, எக்ஸ்பிரஸ். சென்னை - கொச்சி எக்ஸ்பிரஸ், எக்ஸ்பிரஸ் ஒட்டமாகவே ஒடிக்கொண்டிருக்கிறது: அவன்....? -

யாரோ ஒருவன்!

என்னவோ ஒரு பேர்

ஏதோ ஒர் ஊர்.

ஊர் என்றவுடன் -

'யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பாட்டு ஒட்டமாக ஓடிவரவேண்டாமோ?

அவன். கிடக்கிறான்! எக்ஸ்பிரஸ் வேகம் அதிகமாகிறது. ஜாக்கிரதை!

நாட்டிலே இப்போதெல்லாம் ரோஷ' உணர்ச்சியைப் பற்றி ரொம்பவும் தூக்கலாகவே பேசப்பட்டு வருகிறது.

அதனால்தானோ என்னவோ, அந்தத் துரிதவண்டி கொச்சியைக் குறிவைத்துப் பூஞ்சிட்டாகப் பறக்கிறது; பறந்துகொண்டிருக்கிறது. 'சற்றே விலகி இருக்கிறேன்! என்று சொல்லாமல் சொல்லி, தமிழ்மண் சற்றே ஒதுங்கியிருக்க வேண்டும்!

இங்கே, அவன் மனமும் ஒடத் தொடங்கிவிட்டது. அவனுக்கு இன்னமும் 'ஸ்தலம் கிட்டவில்லை. சென்னையில், சென்ட்ரல் ஸ்டேஷனில் தொடர்ந்த ஒற்றைக்கால் தவம் மேலும் தொடர்ந்தது; தொடர்கிறது. பாதங்கள் கெஞ்சின்; கொஞ்சின.