பூவை எஸ். ஆறுமுகம்
17
தண்ணிர்க்குவளை காலி.
"கச்சப் பொடிக் குழம்புக்கு உப்பு திட்டம்தானுங்களே, மச்சான்காரவுகளே."
"ஓ! உப்பு பத்தாட்டி நான் ஒன்னை விட்டிருப்பேனா?”
"ஒங்களை மாதிரிதான் ஒங்க தலைச்சன் வீரமணிப் பயலும்!"
$$.
பலே! பலே!"
கடைக்குட்டி வாண்டு கரவொலி எழுப்புகிறான். நாளைய காந்தி விழாவை அமர்க்களப்படுத்த இவன் ஒருவனே போதும்!
அப்போது -
திட்டிவாசல் வெளியில், சைக்கிள் மணிச் சத்தம் கேட்கிறது.
"வெரசாய்ப் போய்ப் பாரேன், முக்காலும் நம்ப ராசாவாத்தான் இருக்கோணும்; இப்பவே, நம்ப செல்வம் வீரமணியோட மனசையும் கண்டு தண்டிக்கினு, அவனோட கண்ணாலத்தை இந்த ஐப்பசிக் கடுத்தத்திலேயே நடத்திப்பிடலாம்; அப்பவே, புது வீட்டுக்கும் குடி புகுந்திடலாம்! ம்... சல்தியா ஒடுடி, புள்ளே!"
இருட்கன்னி நெற்றியில் இட்டுக் கொண்டிருப்பது இரத்தத் திலகமா, என்ன?
"மகனே, வீரமணி"
அங்காளம்மை பெற்ற பாசம் துடிதுடிக்கக் கதறுகிறாள். வீரமணியின் முகம் ரத்த விளாராக இருந்தது!
3
அங்காளம்மை, தன் மகனின் முகத்தைப் பார்த்து அரற்றினாள்.
"என்னப்பா நடந்திச்சு? நானும் ஒன் ஆத்தாளும் தொட்டுத் தொட்டு அழகு பார்த்து, மாறி மாறி முத்தம் கொடுத்து ஆனந்தமடைஞ்ச உன் கன்னங்க ரெண்டிலேயும் ரத்தம் பீறிடுதே? - யாரப்பா உன்னை இப்படி ஈவு இல்லாம, இரக்கம் இல்லாம அடிச்சுப் போட்டது? ... ஊம், சொல்லு வீரமணி, சொல்லு"- மூர்த்தண்யமாகப் பெற்ற பாசம் சீற முழங்கினார் சேரிச் சாம்பான். கண்கள், மிளகாய்ப் பழங்களாகச் சிவந்தன; சுடுசரம் சுடுகிறது; வழிகிறது.