66
5. தூபம் இடுதல் கண்டேன் தீபம்
சுற்றி எடுத்தல் கண்டேன்
ஆபத்தில் காப்பவனைத் தோழி
அங்கே யான் கண்டிலனே.
6. தில்லைப் பதியும் கண்டேன்-அங்குச்
சிற்றம் பலமும் கண்டேன்
கல்லைக் கணிசெய்வோனைத் தோழி
கண்களால் கண்டிலனே.
7. கண்ணுக்கு இனிய கண்டு-மனத்தைக்
காட்டில் அலைய விட்டு
பண்ணிடும் பூசையாலே-தோழி
பயனொன் றில்லையடி.
8. உள்ளத்தில் உள்ளான் அடி-அது நீ
உணர வேண்டும் அடி
உள்ளத்தில் காண்பாய் எனில்-கோவில்
உள்ளேயும் காண்பாய் அடி.
அடுத்து, இதுபற்றிப் பட்டினத்தார் கூறியிருக்கும்
ஒரு பாடலைக் காண்போம்:-
“சொல்லிலும் சொல்லின் முடிவிலும்
வேதச் சுருதியிலு
மல்லிலு மாசற்ற வாகாயங் தன்னிலு
மாய்ந்து விட்டோ
சில்லிலு மன்ப ரிடத்திலும்
ஈசனிருக்கு மிடம்
கல்லிலும் செம்பிலுமோ இருப்பான்
எங்கள் கண்ணுதலே?”
-பட்டினத்தார் பாடல் - பொது-6