இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
“தமிழர்கள் நல்ல ஹாஸ்ய உணர்ச்சி உள்ளவர்கள். ‘இது ஹாஸ்யம்! இங்கே சிரிக்கவும்!’ என்று அவர்களுக்கு எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. நுட்பமான ஹாஸ்யத்தைக்கூட இனம்கண்டு அனுபவித்துச் சிரிப்பதில் தமிழர்களுக்கு இணை யாருமில்லை!” என்கிறார் கல்கி.
நம்மைச் சிரிக்கச்செய்ய ‘அலைஓசை’யில் பற்பல உரையாடல்கள் காத்திருக்கின்றன!
வகுப்புவாதம், பிராந்தியமோகம், சாதிவெறி, மொழிவெறி போன்ற குறுகிய மனப்பான்மைகள் நம்மிடையே நிலவினால், கேடு விளையும். ஆகவே நாம் தேசீய ஒருமைப்பாட்டுணர்ச்சியுடனும் ஒன்றுபட்ட தேசிய விழிப்புணர்வுடனும் இருக்கவேண்டும்!” என்று அவ்வப்போது நேருஜி நமக்கு அறிவுறுத்தி வருகிறார் அல்லவா?
ஆம்; பாரதப்பிரதமரின் இந்த இலட்சியக் கனவுக்கு கனவின் இலட்சியத்திற்கு ‘அலைஓசை’ ஓர் உரைகல்!