и н А ч 11 5). பாலசுப்பிரமணியன் 45
பிான்றே நீரும் உயிரன்றே; மன்னன் உயிர்த்தே மலர் த லை யுலகம்’ என்பது புறநானூறு. ‘திருவுடை வரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும்’ ச பேது ஆழ்வார்தம் பாடலடி. அரசன் உறையும் அ கண்மனை அன்று கோயில் எனப்பட்டது.
‘மன் ஆனவன் மழை ஆனவன் பொன் ஆனவன்” என்றெல்லாம் இறைவனைக் கூறும் ச ம் ப ந் த ர் ‘முதலானவன்” என்றும் சிவனைக் குறிப்பர். அடுத்து, பெண்ணின் நல்லாளாம் உமையம்மையோடு - உண்ணா முலை யுமையாளொடு உடனாகிய ஒருவனாய் - அண்ணாமலையானாய் வீற்றிருக்கும் இடம் திருவண்ணா மலை என்பதும் இப்பாடல் வழிப் பெறப்படுகின்றது.
கோழி! சிலம்பச்
சிலம்புங் குருகெங்கும் ஏழில் இயம்ப
இயம்பும்வெண் சங்கெங்கும் கேழில் பரஞ்சோதி
கேழில் பரங்கருணை கேழில் விழுப்பொருள்கள்
பாடினோங் கேட்டிலையோ? வாழியி தென்ன
உறக்கமோ? வாய் திறவாய்! ஆழியான் அன்புடைமை
ஆமாறும் இவ்வாறோ? ஊழி முதல்வனாய்
நின்ற ஒருவனை ஏழைபங் காளனையே
பாடேலோர் எம்பாவாய் !